சக தமிழனாய் உங்களை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்

அன்புள்ள
தோழர்களே
நம்முடைய   தோழர் திரு.அமுதன்
அவர்களுடைய   பதிவை நீங்கள்    கேட்டிருப்பீர்கள்
அவர் தானுன்டு   தன் பணியுண்டு  என்று சுயநலமாக  இருந்திருப்பாரானால்
இத்தகைய  அடக்குமுறைக்கு உட்பட்டிருக்க  மாட்டார்

அவர்  செய்த  ஒரே பணி
தாம் பணி  புரியும்
(OCF)   நிறுவன த்தில்
தமிழர்களுக்கு   எதிரான
வட மாநில  அதிகாரிகளின்
செயல்களையும்  குறிப்பாக    தமிழின  சிக்கல்களுக்கு   எதிரான
தம் முடைய  கண்டனத்தை
அவ்வப்போது  தனி ஆளாக
பதிவு செய்து  வந்தார்

குறிப்பாக
தான் பொறுப்பு  வகிக்கும்
தமிழர்  நல   கழகத்தின்
மூலமாக  OCF ல் பயிற்சி பணி (apprentice,)
முடித்த தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும்
மண்ணின் மைந்தர்களாகிய
தமிழர்களின் வேலை வாய்ப்புகளுக்காகவும்
தொடர்ந்து  குரல் கொடுத்து  வந்தார்

அவரின் ஒற்றை குரல்
தமிழினத்தின் குரலாகவே
(OCF) ல் பிரதிபலித்தது

அதை தாங்க முடியாத
நிர்வாகம்
அவரை பல  வழிகளில்
நெருக்கடி கொடுத்தது
அதையெல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்க்கொண்ட தோழரை
இறுதியாக அவர் குரலை
நசுக்க  நிர்வாகம் அவரை
வட மாநிலத்துக்கு பணி மாற்றம்  செய்திருக்கிறது
அதையும் அவர் எதிர்க்கொள்வார்

ஆனால்
அவரின்  இடமாற்றம் தமிழினத்துக்கு ஒரு பிண்ணடைவாகவே இருக்கும் (இதற்க்கு முன்பு எத்தனையோ மலையாளிகளும் வட மாநிலத்தவனும் பல  பெரிய தவறுகளை நிர்வாகத்திற்க்கு எதிராக செய்தும் குறிப்பாக தோழரின்  போராட்டத்தால்
பல  போலி சான்றிதழ் மூலமாக பணிக்கு வந்த வடவர்களையும் நிர்வாகம்
தப்பிக்க வைத்து அவர்கள்
மீது எந்த நடவடிக்கையும் இல்லை ஆனால் தமிழனுக்கு சொந்த மண்ணிலேயே இடறல்கள்

ஆகையால்
இக்குழுவிலுள்ள  தமிழ்
உணர்வுள்ள தோழர் கள்
இக்கட்டான நிலையிலுள்ள

நம் தோழர்
திரு .அழுதன்
அவர்களின் பணி மாற்றத்தை இரத்து செய்ய
அவர் மேற்க்கொள்ளும் முயற்சிகளில் அவருக்கு
ஆதரவு தர வேண்டுமென்றும்
குறிப்பாக முடிந்தவர்கள்
பொருளாதார ரீதியாக
அவருக்கு  உதவ வேண்டுமென்றும்

சக தமிழனாய் உங்களை
தோழமையுடன்
கேட்டுக்கொள்கிறேன்
நன்றி

Comments