அஹிம்சையில் போராடுவோம்.

தமிழகத் தோழர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்:-
 நடக்கவிருக்கும் "நடிகர் சங்க உண்ணாவிரதப் போராட்டத்தின்" புகைப்படங்களையோ அல்லது காணொலியையோ யாரும் பகிரவேண்டாம்.
இளைஞர்கள் மீது இருக்கும் கவனத்தை அப்படியே நடிகர்கள் மீது திருப்பிவிடும்.
தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் நாளை நம்மைக் கண்டுகொள்ளாது.
ரஜினி என்ன சொன்னார்?
கமல் என்ன சொன்னார்?
விஜய், அஜித், சூரியா என்ன சொன்னார்கள் என்று தான் விவாதிப்பார்களே தவிர, இளைஞர்கள் படும் துன்பத்தை நாளை துடைத்துவிடுவார்கள்.
அவர்களது போராட்டம் வரவேற்க வேண்டியதுதான். இருப்பினும் நாம் உணர்வுக்காகப் போராடுகிறோம், அது திசைதிரும்பிவிடக் கூடாது.
எனவே, அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நமது நீதியை நிலைநாட்டிட தொடர்ந்து அற வழியில், காந்திய அஹிம்சையில் போராடுவோம்.
இந்தப் பதிவை முடிந்த வரைப் பகிருங்கள்...
நன்றியுடன்,
உங்களின் ஒருவன்















write your comments

Comments