பகவத்கீதையை பள்ளி பாடமாக மாற்றவேண்டும் என்று இனையதளத்தில் கணக்கெடுப்பு நடக்கிறது

ஆளுனர்களில் 30 பேர் அதில் பிராமணர்கள் 13 பேர்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர் அதில் பிராமணர்கள் 9 பேர்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர் அதில் பிராமணர்கள் 166 பேர்

வெளிநாட்டு தூதர்கள் 140 பேர் அதில் பிராமணர்கள் 58 பேர்

பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர் அதில் பிராமணர்கள் 50 பேர்

மாவட்ட நீதிபதிகள் 438 பேர் அதில் பிராமணர்கள் 250 பேர்

கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர் அதில் பிராமணர்கள் 2376 பேர்

பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர் அதில் பிராமணர்கள் 190 பேர்

ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர் அதில் பிராமணர்கள் 89 பேர்

-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒத்துக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒத்துக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் என இப்போது புரிகிறதா ?

மேற்கண்ட பதவிகள் எதுவும் திறமைகள் மட்டும் இருந்தால் கிடைக்காது எல்லாமே நியமனப் பதவிகள்.

எல்லா ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கலெக்டர் ஆக முடியாது.

 எல்லா வக்கீலும் நீதிபதி ஆக முடியாது.

 எல்லா பேராசிரியரும் துணைவேந்தர் ஆக முடியாது.

எல்லா அரசியல்வாதியும் ஆளுநர் ஆக முடியாது.

மேலே உள்ள எந்தப் பதவிக்கும் இட ஒதுக்கீடு கிடையாது.

அதனால் அவர்கள் அனைவரும் திறைமையால் மட்டுமே பதவிக்கு வந்தார்கள் என்று கூறினால் அது நம்முடைய அறியாமையின் வெளிப்பாடு.

மண்டல் கமிசன் மட்டும் இல்லையென்றால் பிராமணர்கள் தவிர வேறு எவரும் உயர்கல்வியே கற்றிருக்க முடியாது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18% இட ஒதுக்கீட்டில் 5 சதம் கூட முழுமை பெறவில்லை.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதம் இட ஒதுக்கீடும் முழுமை பெறவில்லை.

 அவை வெறும் சட்டங்களாகவே மட்டும்தான் இருக்கின்றது.

 இதனை செய்தியாக்க வேண்டிய ஊடகங்களிலும் அவாள் ஆதிக்கம்.

 செயல்படுத்த வேண்டிய அரசின் உயர் மட்டத்திலும் அவாள் ஆதிக்கம்.

 பகவத்கீதையை பள்ளி பாடமாக மாற்றவேண்டும் என்று இனையதளத்தில் கணக்கெடுப்பு நடக்கிறது

Comments