ஆண்டவன் தீர்ப்பு இது


மாஸ்டர் பிளான்

அடைத்து வைத்திருக்கும் எம் எல் ஏக்களுக்கு ஐந்து கோடி.

மூன்று கோடி ரூபாய் முன் தொகையாகவும்,  எடப்பாடி பழனிச்சாமி யை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மீதமுள்ள இரண்டு கோடி ரூபாய் செட்டில்மென்ட் ஒப்பந்தம்.

மேலும் ஆர்.கே.நகரில் #தினகரன் பேட்டியிட உறுதி செய்யபட்டதாக தகவல். அவர் வெற்றி பெற்றவுடன் #எடப்பாடி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என தகவல்.

 முதல்வர் பதவி ஏற்றவுடன் ஒரு வாரத்தில் ராஜினாமா செய்வார் (நேற்றே தேதி குறிப்பிடாமல் ராஜினாமா கடிதம் வாங்கி வைத்துள்ளார் சசிகலா) பின்பு தினகரன்  முதல்வர் ஆக தேர்ந்து எடுத்ததாகவும் கடிதம் நேற்று எல்லா எம் எல் ஏ க்களிடம் மிரட்டி கையோப்பம் வாங்கப்பட்டுள்ளது.

மேலும் தினகரனை முதல்வர் ஆக்கியவுடன்...

 #வெங்டேஷ் சுகாரதுறை மந்திரி,

ராவணன் நிதி மந்திரி,

#நடராசன் துனை முதல் மந்திரி,

மருத்துவர் சிவகுமார் பொதுப்பணிதுறை,

இண்னும் பல சசி குடும்ப உறுப்பினர்கள் அமைச்சராக பதவி எற்க உள்ளனர்.

இந்த இந்த நாட்டையும்  விலை பேசிவிடுவார்கள் மாஃபியா கும்பல்...

இவர்களது பிளான் ஒர்க் அவுட் ஆகிவிட்டால் தமிழ்நாடு பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்.

சாமானிய மக்கள் வாழ்வது கேள்விக் குறி தான்.

மேலும்  சசிகலா, ஜெயலலிதா கல்லறையில் ஓங்கி மூன்றுமுறை அடித்துச் சபதம் செய்த காட்சியைப் பார்த்தோம்..

 என்னவொரு வெறி

 இத்தனை செய்து, இத்தனை பட்டும் இந்தக் கூட்டத்துக்கு என்னவொரு ஆங்காரம்?

இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த யாரும் காலாகாலத்துக்கும் பொதுப் பதவி எதற்கும் வராத அளவுக்குச் செய்யாவிட்டால் நாமெல்லாம் மனிதர்களே அல்ல.  🏇🔔

கீழே உள்ள வார்த்தைகளைப் பாருங்கள்...

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் எழுதி இருக்கும் தீர்ப்பின் வார்த்தைகள் கல்வெட்டுகள்..

1. வேதனையான மவுனம் வெகுகாலம் நீடித்ததால்  கவலை தரக் கூடிய தகவல்கள் மேடையேற்றவேண்டி உள்ளது.

2. சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சிகளும் இல்லை

3. இவர்கள் தந்திரங்களைப் பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது.

4. பணம் சம்பாதிப்பதை அச்சமில்லாமல் செய்துள்ளனர்.

5. இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது.

6. இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்து விடும்.

7. இவர்களை அனுமதித்தால் நாட்டில் நியாய தர்மம் பார்ப்பவர்கள் சிறுபான்மை ஆகி விடுவார்கள்.

8. இவர்கள் சமுதாயத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

9. வருமானத்திற்கு அதிகமாக 211 சதவீதம் சம்பாதித்து உள்ளார்கள்.

10. இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததே வாழ்வதற்காக அல்ல சதி செய்வதற்காகவே.


Comments

Post a Comment