தமிழ்நாட்டில் இருக்கிற மூப்பனார், செட்டியார் ஆந்திராவில் இல்லை, ஆந்திராவில் உள்ள ரெட்டி, நாயுடு கர்நாடகாவில் இல்லை, கர்நாடகாவிலுள்ள கவுடா தமிழ்நாட்டில் இல்லை. கேரளாவிலுள்ள நாயர், குஜராத்தில் இல்லை, குஜராத்தில் உள்ள படேல் ஒரிஸாவிலில்லை, ஒரிஸாவிலுள்ள பட்நாயக் உத்தர பிரதேசத்தில் இல்லை, உத்தரப்பிரதேசத்திலுள்ள யாதவா காஷ்மீரில் இல்லை, காஷ்மீரிலுள்ள ஜாதவா பீகாரில் இல்லை, பீகாரில் உள்ள யாதவ் பஞசாபில் இல்லை, பஞ்சாபிலுள்ள ஜாட் இமாச்சல், அஸ்ஸாம், மணிப்பூரில் கிடையாது. ஆனால் பட்டியலினத்தவர் இல்லாத இடமே இந்தியாவில் கிடையாது. ஏன்னா நாம் தேசிய இனம். இந்த தேசம் அழியாம இருக்கிறதும் நம்ம இனத்தால் மட்டுமே. ஆக இந்த தேசத்தைக் கட்டி காக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. இப்படியான தேசிய இனத்திற்கு ஒரு தேசிய கட்சி இருக்கணும், ஒரு தேசிய தலைமை இருக்கணும், அந்த தலைமைக்கும், நமக்கும் ஒரே கொள்கைதான் இருக்கணும். அதாவது, ''ஒரு தேசிய கட்சி, ஒரு தேசிய கொள்கை, ஒரே தலைமை'' என ஒருங்கிணைப்பா இருக்கணும். எப்படி? அம்பேத்கரியர்களாக. இந்த அமைப்பிற்குதான் ''பீம மார்க்கம்'' என்று பெயர். அதனால்தான் நாம் சொல்கிறோம் ''ஜெய் பீம்'' என்று. இதைப்போல நம் மக்களை ஒருங்கிணைத்து, ஒரே மாதிரியாக சிந்திக்க தூண்டுவது நம் கைகளில்தான் உள்ளது. பாபாசாகேப் பார்வையில் ''ஜெய் பீம்'' அர்த்தம் என்பது இதுதான். இந்த மாதிரி நாம் எல்லோரும் சிந்தித்தா, குறைந்தது 5 வருடம், அதிகபட்சம் 10 வருடங்களில் இந்த தேசமே நம் கைகளில்தான் இருக்கும். நம் கைக்கு வந்ததும் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக அமல் படுத்தினால் இந்த நாட்டில் சாதி ஒழியும், வறுமை ஒழியும், இந்தியா வல்லரசாகும். சரி இதை தலைமையெடுத்து பொறுப்பாய் செய்ய வேண்டியது யார்?
இதை நடைமுறைப்படுத்த வேண்டியது நிச்சயமாக படித்த அரசு ஊழியர்களையே சாரும். இங்கே யாராவது அரசு ஊழியர்கள் இருக்கிறீர்களா? எல்லோருக்கும் தெரிந்த கதை ஒன்று.
ஒரு நாட்டின் அரசன் புதிதாய் ஒரு அரண்மனை பளிங்கு மாதிரி கட்டி அத்துடன் ஒரு குளம் அமைத்தான். அரண்மனை போல் குளத்தின் தண்ணீரும் வெள்ளை நிறத்தில் இருக்க விரும்பினான். அதற்காய் நாட்டு மக்கள் அனைவரும் பாலை கொட்டி குளத்தை வெள்ளையாக மாற்ற நினைத்து மக்களிடம் அறிவித்தான். மக்களும் அவ்வாறே செய்த மறுநாள் குளத்தை பார்வையிட்ட அரசன் அதிர்ச்சியானான். ஏன்னா எல்லோருமே பாலுக்கு பதிலாய் அனைவருமே தண்ணீரையே ஊற்றி நிரப்பியிருந்தார்கள். அதாவது ''நாம் மட்டும்தானே தண்ணீர் ஊற்றுகிறோம்'' என எல்லோருமே நினைத்து தண்ணீரை ஊற்றியிருந்தனர்.
இந்த கதையை போல் 'நான் மட்டும்தானே செய்யாமல் இருக்கிறேன். மற்றவர்கள் செய்வார்கள்'' என்று ஒவ்வொருமே நினைத்து எல்லாருமே செய்யாமல் இருப்பதுதான் நமது இந்த இழிநிலைக்கு காரணம். அதாவது ''எல்லாரும் சேர்ந்தா நானும் செய்ய தயார்'' என நினைப்பதும், ''நான் ஒருத்தன் என்ன செய்வது?, ''எல்லாரும் சேர்ந்தா பார்ப்போம்'', ''எனது அரசு வேலைக்கு இதனால் ஏதேனும் பங்கம் வந்திடுமோ?'' என்கிற மாதிரியான சிந்தனை நமக்கு இருக்கக் கூடாது. இதுதான் சேரி புத்தி, தலித் புத்தி. அப்ப சிந்தனை எப்படி இருக்கணும்? ''எவன் இதை பண்ணுகிறானோ, இல்லையோ, எனக்கு பாபாசாகேப்பினால்தான் கல்வியிலும், வேலையிலும் ரிசர்வேசன் கிடைச்சது. அதனால நான் அந்த நன்றியுணர்வோடு இந்த சமூகப்பணி பண்ணுவேன்'' என்ற சிந்தனைதான் இருக்கணும். அப்படி முடிவெடுக்கலைன்னா, ''யாருமே வாங்காத ரிசர்வேசனை நான் ஏன் வாங்க வேண்டும்? என்றாவது சிந்திக்க வேண்டும்.
இதை நடைமுறைப்படுத்த வேண்டியது நிச்சயமாக படித்த அரசு ஊழியர்களையே சாரும். இங்கே யாராவது அரசு ஊழியர்கள் இருக்கிறீர்களா? எல்லோருக்கும் தெரிந்த கதை ஒன்று.
ஒரு நாட்டின் அரசன் புதிதாய் ஒரு அரண்மனை பளிங்கு மாதிரி கட்டி அத்துடன் ஒரு குளம் அமைத்தான். அரண்மனை போல் குளத்தின் தண்ணீரும் வெள்ளை நிறத்தில் இருக்க விரும்பினான். அதற்காய் நாட்டு மக்கள் அனைவரும் பாலை கொட்டி குளத்தை வெள்ளையாக மாற்ற நினைத்து மக்களிடம் அறிவித்தான். மக்களும் அவ்வாறே செய்த மறுநாள் குளத்தை பார்வையிட்ட அரசன் அதிர்ச்சியானான். ஏன்னா எல்லோருமே பாலுக்கு பதிலாய் அனைவருமே தண்ணீரையே ஊற்றி நிரப்பியிருந்தார்கள். அதாவது ''நாம் மட்டும்தானே தண்ணீர் ஊற்றுகிறோம்'' என எல்லோருமே நினைத்து தண்ணீரை ஊற்றியிருந்தனர்.
இந்த கதையை போல் 'நான் மட்டும்தானே செய்யாமல் இருக்கிறேன். மற்றவர்கள் செய்வார்கள்'' என்று ஒவ்வொருமே நினைத்து எல்லாருமே செய்யாமல் இருப்பதுதான் நமது இந்த இழிநிலைக்கு காரணம். அதாவது ''எல்லாரும் சேர்ந்தா நானும் செய்ய தயார்'' என நினைப்பதும், ''நான் ஒருத்தன் என்ன செய்வது?, ''எல்லாரும் சேர்ந்தா பார்ப்போம்'', ''எனது அரசு வேலைக்கு இதனால் ஏதேனும் பங்கம் வந்திடுமோ?'' என்கிற மாதிரியான சிந்தனை நமக்கு இருக்கக் கூடாது. இதுதான் சேரி புத்தி, தலித் புத்தி. அப்ப சிந்தனை எப்படி இருக்கணும்? ''எவன் இதை பண்ணுகிறானோ, இல்லையோ, எனக்கு பாபாசாகேப்பினால்தான் கல்வியிலும், வேலையிலும் ரிசர்வேசன் கிடைச்சது. அதனால நான் அந்த நன்றியுணர்வோடு இந்த சமூகப்பணி பண்ணுவேன்'' என்ற சிந்தனைதான் இருக்கணும். அப்படி முடிவெடுக்கலைன்னா, ''யாருமே வாங்காத ரிசர்வேசனை நான் ஏன் வாங்க வேண்டும்? என்றாவது சிந்திக்க வேண்டும்.
Comments
Post a Comment