உழைப்பதற்காக வாழாதீர்கள் ! வாழ்வதற்காக உழையுங்கள்

"அப்பா நான் ஒரு கேள்வி கேட்கவா ?" என்றாள் மகள்.

" என்னடாம்மா  கேளு..?"

 "ஒரு மணி நேரத்தில் எவ்ளோ சம்பாதிப்பிங்கப்பா ?"

அப்பா : " நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"

மகள் : "சும்மா தெரிஞ்சிக்கத்தாம்பா...! சொல்லுங்கப்பா ."

அப்பா : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ...! மணிக்கு நூறு ரூபாய் சம்பாதிப்பேன் சராசரியா ...!"

மகள் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ரூபாய் எடுத்துக்கவா ?"

அப்பாவிற்கு கோபம் வந்தது !
"நீ இவ்ளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??
ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நான் இங்க உங்களுக்காக நாய்போல உழைக்கிறேன்..."

அந்த சின்னபெண் அமைதியாக அவள் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டாள் !

அப்பா மகளின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் .

ஒரு மணி நேரம் கழித்து சாந்தம் அடைந்து யோசித்தார் ஏன் இப்படி மகள் கேள்வி கேட்டாளென்று ..!

ஒருவேளை அவளுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகளிடம் சென்றார் .
 "தூங்கிட்டியாடா ?"
 "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..."

"நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட ஐம்பது ரூபாய் .."

அந்த மகள் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தாள் .
 "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "

அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .!

அந்த சிறுமி மெதுவாக பணத்தை எண்ணி சரி பார்தாள்.! பிறகு அப்பாவை  பார்த்தாள்...!

 "உனக்கு எதுக்கும்மா இவ்வளவு பணம்? அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேர்த்து வச்சி இருக்குயே ..."

மகள் : "ஏன்னா நான் சேர்த்து வச்சிருந்தது அம்பது ரூபாய். இப்போ இதையும் சேர்ந்த்தா என்கிட்டே நூறு ரூபாய் இருக்கு ...! இதை நீங்களே வச்சிக்கோங்கப்பா..!

இப்போ நான் உங்களோட ஒரு மணி நேரத்தை வாங்கிக்கலாமா ?
நாளைக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்கப்பா ...! எனக்கு உங்ககூட ஒண்ணா உட்கார்ந்து  சாப்பிட ஆசையா இருக்குப்பா ..! "

அந்த அப்பா உங்களைப்போலவே உடைந்து விட்டார் ...! மகளின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...!
தன் மகளிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்!

வாழ்க்கைக்கு  பணம் முக்கியம் ! அதோடு குடும்ப உறவுகள் அதிமுக்கியம் !

உழைப்பதற்காக வாழாதீர்கள் ! வாழ்வதற்காக உழையுங்கள் 

Comments