பேரம்பாக்கம் முகாம் கூட்டம் :
_________________________________
இன்று (28/05/2017) மாலை 6.0 மணிக்கு பேரம்பாக்கம் முகாமில் முகாம் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய முகாம் பொருப்பாளர்களை நியமனம் செய்துவைத்தேன்.
இந்த முகாம் கூட்டத்திற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ்ச்செல்வன்,ஒன்றிய பொருளாளர் தோழர் ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணன் டில்லி, வணிகரணி மாவட்ட அமைப்பாளர் அண்ணன் சஞ்சீவி மாருதி, தொண்டரணி(பயிற்சி) மாவட்ட துணை அமைப்பாளர் நண்பர் விஜய் என்கிற தமிழ் , தொழிலாளர் விடுதலை முன்னணியின் ஒன்றிய அமைப்பாளர் அண்ணன் புருஷோத், அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை மாவட்ட பொருப்பாளர் அண்ணன் சுந்தரம் ஆகியோர்கள் கலந்து கொண்டு புதிய முகாம் பொருப்பாளர்களை வரவேற்று வாழ்த்தி பேசினார்கள்.
இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய முகாம் பொருப்பாளர்கள் முகாமி கட்சி வளர்ச்சி அடைய சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும்.
2)ஆகத்து -17 தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது
3) ஜூன் 02-ல் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த மத்திய பிஜேபி அரசைக் கண்டித்து நமது கட்சியின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற இருக்கும் ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவண்,
சு. ஈசன்
ஒன்றியச் செயலாளர்
கடம்பத்தூர் தெற்கு ஒன்றியம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
Comments
Post a Comment