தவறாமல் படித்ததும்
பகிருங்கள்
"""நண்பர்களே"""
*ஒரு குட்டி கதை...*
ஒரு ஊரில் பெரிய
*கோயிலில் கோபுரத்தில்*
நிறைய புறாக்கள்
வாழ்ந்து வந்தன,
திடீரென்று
*கோயிலில் திருப்பணி*
நடந்தது
அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன.
வழியில் ஒரு
*தேவாலயத்தை கண்டன*
அங்கும் சில புறாக்கள்
இருந்தன
அவைகளோடு இந்த
புறாக்களும்
குடியேறின.
சில நாட்கள் கழித்து *கிறிஸ்துமஸ்*
வந்தது.
தேவாலயம் புதுப்பிக்க தயாரானது..
இப்போது இங்கு இருந்து
.சென்ற
பறவைகளும்
அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .
வழியில் ஒரு *மசூதியை கண்டது*
அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு
இந்த புறாக்களும்
குடியேறின
சில நாட்கள் கழித்து *ரமலான்*வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.
இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின...
*கீழே மனிதர்கள்
சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.*
ஒரு குஞ்சுப்புறா
தாய் புறாவிடம் கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...
அதற்கு அந்த தாய் புறா சொன்னது
"நாம்
இங்கு இருந்த போதும்
*நாமெல்லாம்*
*புறா தான்..?*
தேவாலயத்துக்கு
போனபோதும்
*நாமெல்லாம்*
*புறாதான்..?*
மசூதிக்கு போன போதும்
*நாமெல்லாம்*
*புறா தான்..?"*
"ஆனால் மனிதன் ...?!
*கோயிலுக்கு போனால் இந்து*
*சர்ச்க்கு போனால்*
*கிறிஸ்த்தவன்*
*மசூதிக்கு போனால்*
*முஸ்லிம்*
என்றது;
குழம்பிய குட்டி புறா"
*அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்*
என்றது.
அதற்கு தாய் புறா "
இது புரிந்ததனால்தான்
*நாம்*
*மேலே இருக்கிறோம்,*
*அவர்கள்*
*கீழே இருக்கிறார்கள்"*
என்றது..
++++++++++++++++++
(படித்ததில் பிடித்தது)🤔🤔🤔
Comments
Post a Comment